சென்னை: ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களுக்கு முன், அவருக்கு விளக்கமும் அனுப்பப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் ஆய்வு மேற்கொண்டு, நிலமாற்றமும் செய்யப்பட்டு தயாராக உள்ளதாக பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்படும்?.. பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
previous post