புதுச்சேரி மக்களவை தொகுதியை கூட்டணி கட்சியான பாஜவுக்கு ஒதுக்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்து, அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனால் புதுவையில் போட்டியிட ஆளுநர் தமிழிசை அமித்ஷா விட்ட வாய்ப்பு கேட்டார். இதுபோன்று பாஜ மூத்த தலைவர்களும், அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.
அப்போது உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்தை சார்ந்த சமூக ஓட்டுகள் புதுச்சேரியில் அதிகம் உள்ளதால் அவரை நிறுத்தலாம் என்று கூறி உள்ளனர். பாஜ வேட்பாளராக நமச்சிவாயத்தை நிறுத்த ரங்கசாமியும் பச்சை சிக்னல் காட்டி விட்டதாக கூறப்படுகிறது. வரும் 11ம் தேதி சென்னை வரும் ஜெ.பி.நட்டா அப்போது புதுச்சேரி வேட்பாளரை இறுதி செய்து அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிட நமச்சிவாயம் தயங்குவதாக கூறப்படுகிறது.