சென்னை: கொளத்தூர் கதிர்வேடு சத்யமூர்த்தி நகர் 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்குள் சோதனை நடத்தினர். அப்போது, ஷெனாய் நகர் அப்பாராவ் கார்டன் 3வது தெருவை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் பைரோஸ் சர்மா (24) என்பவர், 2 இளம் பெண்களை வைத்து கடந்த 6 மாதங்களாக பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், அவருக்கு உதவியாக இருந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த அயூப் (33) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள பாலியல் ஏஜென்ட் பாஷாவை தேடி வருகின்றனர்.
பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் கைது
previous post