சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. இசிஜி, எக்கோ பரிசோதனைக்காக சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார். கால் மரத்துப்போனதால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். நடக்க சிரமப்பட்டதால் வீல் சேர் வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு பின் செந்தில்பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.