சென்னை: செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எந்த காட்சிகளும் கூறவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.