சென்னை: செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தேதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது. வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளையும் நான் கருத்தில் கொள்ள
வேண்டும் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறியுள்ளார்.