சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட்.28ம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சிறையில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி காணொலி காட்சி மூலம் எம்.பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.