டெல்லி: செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புல சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜி உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கப்படுகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.