சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டு வருகின்றனர். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு நிலைக்கத்தக்கதா? போலீஸ் காவல் சட்டவிரோத காவலா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.