சென்னை :”சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் எம்எல்ஏவாக உள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.