Saturday, June 15, 2024
Home » தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்

தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்

by Karthik Yash

சென்னை: தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக நர்ஸ் மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (24),பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பொறியாளர் செல்வமணி (29)யுடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானதால் அவர் வீட்டிற்கு சொல்லாமல் 7 மாத கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார்.

இதற்கிடையே திடீரென கடந்த 30ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதை யாருக்கும் ெசால்லாமல் இந்து தனக்கு தானே கழிவறையில் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது குழந்தை சரியாக வெளியே வராததால், அதை கை மற்றும் கால்களை பிடித்து இழுத்தபோது கிழிந்து தனியாக வந்தது. இதனால் நர்ஸ் இந்துவுக்கு அதிகளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தோழிகள் மூலம் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்த குழந்தையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனை புகாரின்படி நர்ஸ் இந்து மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பிரசவிக்கும் போது, சதைப்பிடிப்பு காரணமாக குழந்தை வெளியே வரவில்லை. அப்போது நர்ஸ் குழந்தையை பிடித்து இழுத்த போது, கை மற்றும் கால் எலும்புகள் கிழிந்துள்ளது. இதனால் நர்ஸ் சிறிய கத்தியால் கிழிந்த கை மற்றும் கால்களை அறுத்து தனியாக எடுத்துள்ளார். இதனால் குழந்தை இயற்கைக்கு மாறாக ஏற்பட்ட ரத்த போக்கால் இறந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து அரசு மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, நர்ஸ் மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். சிகிச்சை முடிந்த பிறகு நர்ஸை போலீசார் கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

fourteen + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi