சென்னை: ஒளிவு மறைவின்றி நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்படும். நூலகங்களுக்கு நூல்கள் வாங்க நிபுணர்கள் அடங்கிய தேர்வுக்குழு ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு அண்மையில் 3.50 லட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம், சமூக நீதி கேள்விக்குறியாக மாறியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.