சென்னை: சென்னை தாம்பரத்தில் பா.ஜ.க. பிரமுகரிடம் கடந்த வாரம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி கோவர்த்தனனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பாக நேரில் ஆஜாகும்படி பா.ஜ.க. நிர்வாகிக்கு தாம்பரம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.