திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் சீனியர் மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து சாட்டையால் அடித்து தண்டனை வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விடுதியில் 3ம் ஆண்டு படித்து வரும் சீனியர் மாணவர்கள் சிலர் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து சாட்டையால் அடித்து தண்டனை வழங்குவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உண்மையில் துன்புறுத்தப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். ஜூனியர்களை, சீனியர் மாணவர்கள் சாட்டையால் அடிக்கும் வீடியோ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.