புதுக்கோட்டை: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. நீலகிரி, புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் தொடங்கியது. அரசின் திட்டங்கள் மக்களிடம் விரைந்து செல்வதை உறுதி செய்ய உங்களைத்தேடி உங்கள் ஊர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் மக்களிடம் சென்றடைய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் கனிவோடு பரிசலித்து தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.