சென்னை: தமிழ்நாட்டில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி 1,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. முக்கிய பகுதிகளிலிருந்து சென்னை வர ஏதுவாக 650 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படுகிறது.