சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் உள்ள கோயிலில் மாசி பவுர்ணமி விழாவில் அரசின் விதிமுறைகளை பின்பற்ற ஆணை பிறப்பித்துள்ளது. ஆதி கருவண்ணராயர், பொம்மாதேவி கோயில் விழாவில் அரசின் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று, ஒலி மாசு ஏற்படுவதாக கற்பகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். விலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறியுள்ளது. பிளாஸ்டிக், மதுபானங்கள் கொண்டு வரக் கூடாது, பட்டாசு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் அறிவித்துள்ளது.