கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவரான குணசேகரனுடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்துள்ளதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், ஆதிலிங்கம் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமி விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சம்மன் அனுப்பியது.
அப்போது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருந்ததால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று நடிகை வரலட்சுமி என்ஐஏ அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது. இப்போது அதைக் காட்டி பாஜவினர் பேசினார்களா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.