தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்றிரவு சுவர் விளம்பரம் எழுதுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாஜக சங்கரன்கோவில் நகரத் தலைவர் கணேசன், பாஜக நகர இளைஞரணி பொறுப்பாளர் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நெடுஞ்சாலைத் துறை சார்பில் தரப்பட்ட புகாரின் பேரில் கணேசன், விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.