காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய அரசின் கல்வி அமைச்சக நிதி உதவியுடன் ஆதிசங்கரர் வியாக்கியானமாலா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சமஸ்கிருதத்துறை தலைவர் ஸ்ரீ சைலம் வரவேற்றார். கருத்தரங்கில் புதுதில்லி, ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளிட்ட கல்லூரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில், புதுதில்லி லால்பகதூர் சாஸ்திரி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர் அனந்தா, திருப்பதி மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர் சங்கரநாராயணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையற்றினார். நிறைவாக கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சங்கரா கல்லூரியில் கருத்தரங்கம்
previous post