‘பெரிய தல எல்லாம் வரப்போகுது. கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங் ஆகப்போகுது’னு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சொல்லிட்டே இருந்தார். சும்மா சொல்லக்கூடாது மனுஷன் சொன்ன மாதிரியே ஏகப்பட்ட ஆளுகள இழுத்துட்டாரு. முதல்ல வந்தது ஐஜேகே எனப்படுகிற இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர். அப்புறம் புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம். அடுத்து தான் அதிர்ச்சி. யாருமே எதிர்பார்க்காத ஒரு தலைவர் – வேற யாரும் இல்ல.. தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன். இதோட நிறுத்திருவாரா அண்ணாமல… அடுத்து ஒரு ஷாக் கொடுத்தாரு.
தமிழ் மாநில காங்கிரசின் ஜி.கே.வாசனையே பாஜ கூட்டணி பக்கம் இழுத்துட்டார். ஆனா இதுல சின்னதா ஒரு டிவிஸ்ட் நடந்துபோச்சு. பாஜ கூட போறத அதிகாரப்பூர்வமா வாசன் அறிவிச்ச அடுத்த ெசகண்ட்டே, அவர் கட்சியின் இளைஞர் அணி செயலாளரான யுவராஜ் நேரா எடப்பாடி பழனிசாமிய பாக்கப் போயிட்டாரு. மரியாத நிமித்தமா சந்திச்சேன்னு யுவராஜ் சொன்னாலும், வாசன் பாஜ பக்கம் போனது பிடிக்காம தான் அதிமுக வாசல்ல போயி நின்னுருக்காருன்றது எல்லாருக்கும் தெரியும். சீக்கிரமா இவர் அதிமுகவுல சேரப்போறதா பேச்சு ஓடுது. தமாகால இருக்கிற ரெண்டு பேருல ஒருத்தர் அந்தப் பக்கமும் இன்னொருத்தர் இந்தப் பக்கமும் போயிட்டதுல வருத்தம் தான்.
இருக்கட்டும். நில்லுங்க இன்னும் லிஸ்ட் முடியல. சமக எனப்படுகிற சரத்குமார் மட்டுமே உள்ள கட்சி ஒண்ணு இருக்கே. அதுவும் வெயிட்டிங்ல இருக்கு. பிரஸ் மீட் நடக்கும்போதெல்லாம், ‘என்ன எப்ப பாத்தாலும் எந்தக் கூட்டணிக்கு போறீங்க..எந்தக் கூட்டணிக்கு போறீங்கன்னே கேட்டுட்டு இருக்கீங்க.. ஏன் என்னைப் பாத்தா தனிச்சு நிக்குற ஆளு மாதிரி தெரியலயா..’ என நிருபர்களுக்கு ‘ஜெர்க்’ கொடுக்க வைப்பவர் சரத்குமார். அப்பிடி சொல்றாரே தவிர அவருக்கு பாஜ பக்கம் போய் சீட் வாங்கிடணும்றது தான் ஆசை. பாவம் அதுக்காக அடிக்கடி நெல்லைக்கும் விசிட் அடிச்சுட்டு இருக்கார். ஆனா அண்ணாமல சொல்றா மாதிரி வலிமையான கூட்டணியா இதுனு தெரிஞ்சா சொல்லுங்க… சாமி.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..