டெல்லி: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு விநோதமான மனுவை தாக்கல் செய்துள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி கருத்து தெரிவித்துள்ளார். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு தடை விதிக்கப்பட்டது. தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ED தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.