சேலம்: அழகாபுரத்தில் ரூ.300 கோடி மோசடி செய்த புகாரில் பாஜக பிரமுகர் பாலசுப்ரமணியம் மீண்டும் கைது செய்யப்பட்டார். 2019-ல் ஜஸ்ட் வின் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் பாலசுப்ரமணியம் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தன் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் வட்டியுடன் மாதம் ரூ.18,000 தருவதாகக் கூறி ரூ.300 கோடி மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், கோவை என பல மாவட்டங்களில் கிளை நிறுவனங்களை நிறுவி பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மக்கள் பணத்தை முதலீடு செய்த நிலையில் திடீரென பாஜக பிரமுகர் பாலசுப்ரமணியம் தலைமறைவானார். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் பாலசுப்ரமணியம், அவரது மனைவி, மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.