சேலம்: பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் புத்தகங்கள் வெளியிடத்தடை விதித்து சேலம் பெரியார் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் இதுவரை அனுமதி பெற்று, அனுமதி பெறாமல் வெளியிட்ட புத்தகங்கள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தகவல்களை பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் வழங்கவும் பதிவாளர் தங்கவேலு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.