Tuesday, May 28, 2024
Home » சாய் சுதர்சன் அபார சதம்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

சாய் சுதர்சன் அபார சதம்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

by Francis

கொழும்பு: ஏசிசி எமர்ஜிங் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் ஏ அணியுடன் நேற்று மோதிய இந்தியா ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. காசிம் அக்ரம் 48, சாகிப்ஸதா 35, முபாசிர் 28, மெஹ்ரான் 25* ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 5, மானவ் சுதர் 3, பராக், நிஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 36.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்து வென்றது.

அபிஷேக் 20, நிகின் ஜோஸ் 53 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சாய் சுதர்சன் 104 ரன் (110 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் யஷ் துல் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பி பிரிவில் இந்தியா ஏ அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. பாகிஸ்தான் ஏ (4 புள்ளி) 2வது இடம் பிடித்தது. நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டங்களில் இலங்கை ஏ – பாகிஸ்தான் ஏ, வங்கதேசம் ஏ – இந்தியா ஏ அணிகள் மோதுகின்றன.

You may also like

Leave a Comment

18 − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi