சென்னை: அடையாறு தேர்தல் அலுவலகத்தில் தென்சென்னை திமுக ேவட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கடந்த மார்ச் 20ம் தேதி தொடங்கியது. மார்ச் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 28ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மார்ச் 30ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள்.
அந்தவகையில், தென் சென்னையில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். அதன்படி அடையாறு தேர்தல் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக ேவட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக கூட்டணியின் உள்ள விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
முன்னதாக காலை சைதாப்பேட்டை பஜார் சாலையில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பணிமனையினை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், மேயர் மகேஷ் குமார் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை கிழக்கு பகுதிகளான ஆலந்தூர் ரோடு, நெருப்பு மேடு, செட்டி தோட்டம், ஜோதியம்மாள் நகர், விஜிபி சாலை, பார்சன் காம்ப்ளக்ஸ், விநாயகபுரம் ஆகிய பகுதிகளில் தென்சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டின் பிரச்சாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சைதாப்பேட்டை மேற்கு பகுதிகளான ரத்தினம் தோட்டம், வ.உ.சி. தெரு, கருணாகரன் தெரு, பாரதியார் தெரு, துரைசாமி தோட்டம், விலாமர குடிசை, சொத்தவால்சாவடி தெரு, மசூதி சந்து, மசூதி பள்ளம், மசூதி தெரு, செட்டித் தெரு, விவி கோயில் தெரு, புஜங்கர் தெரு, சாமியார் தோட்டம், காவலர் குடியிருப்பு, பிராமின் லேன், பிராமின் தெரு மற்றும் முடிவு பகுதியாக ஆலந்தூர் சுங்கப்பாதை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.