திருவனந்தபுரம்: சபரிமலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலையில் இந்த சீசனில் பெண்கள், குழந்தைதகள் அதிக அளவில் வருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உயர்நீதிமன்றம் மற்றும் அரசு தெரிவித்துள்ளது.
எனவே பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்தினாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்படும். அவர்களுக்காக கோயில் அருகே சிறிய கேட் அமைக்கப்பட்டு அது வழியாக தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.