வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி சிஏஏவுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, தற்போது எதிராக வரலாற்று பிழை என மாற்றி பேசுகிறார். இந்திய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என நிரூபித்தால், அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் ரூ.1 கோடி பரிசளிக்கப்படும். புதியதாக கட்சி துவங்கியுள்ள ஜோசப் விஜய்க்கு அரசியல் அடிப்படை அறிவு கூட இல்லை. விஜய்யின் அறிக்கையை நான் கண்டிக்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுப்பது அவசியம். அதை பாஜகவிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்த சட்டமே அண்டை நாடுகளில் இருந்து இஸ்லாமியர்களை தவிர மற்ற மதத்தினருக்கு குடியுரிமை சட்டம் வழங்கப்படுவதுதான். இது கூட தெரியாமல் அர்ஜூன் சம்பத் காமெடி செய்து உள்ளார்.