சென்னை: ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனுத் தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். பெட்ரோல் குண்டு வீசியதை பார்த்ததாக கூறும் ஆயுதப்படை காவலர் சில்வானிடமும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.