சென்னை: கல்வி உரிமைச்சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. ‘ஒரு கி.மீ. தொலைவுக்குள் அரசு பள்ளி இருப்பின் அதே பகுதி தனியார் பள்ளிக்கு ஆர்டிஇ இடஒதுக்கீடு இல்லை. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஏதுவாக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை என தகவல் தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு அதிக தொகை வழங்குவதை கட்டுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.