ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே படப்பை அடுத்த ஒரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நீலமங்கலம் ஏரி கரையில் முட்புதர் மண்டிய பகுதியில் நேற்று அழுகிய நிலையில் சடலம் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்துகிடந்தவர் ஆணா, பெண்ணா என அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், கொலை செய்யப்பட்டார அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே இறந்தவரின் பாலினம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.