புதுச்சேரி: தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுராக பதவி வகித்து வரும் தமிழிசை எக்ஸ் தளம் ஹேக்கர்களால் கடந்த 17ம் தேதி முடக்கப்பட்டது. இதுகுறித்து தெலங்கானா சைபர் கிரைமில் ஆளுநர் மாளிகைசார்பில் புகார் அளிக்கப்பட்டது. எக்ஸ் தளத்தை மீட்க ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 3 நாட்களாக முடக்கப்பட்டிருந்த தமிழிசையின் எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டு நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் எக்ஸ் தள பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எக்ஸ் தள பக்கத்தை மீட்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.