சென்னை: ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு முடித்துவைக்கபட்டது. முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்தட்டும், அதில் திருப்தி இல்லை என்றால் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதி தெரிவித்தார். சோழவரம் அருகே ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விளக்கத்தை ஏற்று, சிபிஐ விசாரணை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.