ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சுமைதாங்கி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 2வது நாளில் ஆண் குழந்தை உயிரிழந்தது. கன்னிகாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார், சந்திரிகா தம்பதியின் ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உரிய விளக்கம் தரவில்லை என குற்றஞ்சாட்டி உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.