ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் காவேரிப்பாக்கம் அருகே இளைஞர் இளவரசனை(28) கொன்று புதைத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக இளவரசனை கொலை செய்த லோகேஷ், பூவரசன், வாசுதேவன், அருண்குமார் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற இளவரசனை பாட்டிலால் தாக்கி கொன்று பாலாற்றில் புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.