டெல்லி: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க 3ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தநிலையில் சஞ்சய் சிங்கை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்.