ஜெய்பூர்: 40 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன்கள் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ய்ப்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ராஜஸ்தானில சிரஞ்சீவி திட்டத்தின்கீழ் 1.35 கோடி பெண்களை குடும்ப தலைவிகளாக மாற்றியுள்ளோம். இந்த பெண்களுக்கு 3 ஆண்டு இலவச இணைய இணைப்புடன் கூடிய இலவச செல்போன்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக ரக் ஷாபந்தனை முன்னிட்டு முதற்கட்டமாக 40 லட்சம் பெண்களுக்கு இலவச செல்போன்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.