சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி அனுப்பலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி அனுப்ப அனுமதிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.