டெல்லி : பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்து ரயில்வே துறையின் கொள்கைகளை பாஜக அரசு வகுத்து வருவதாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேலும் “தொழிலாளர்கள், விவசாயிகள் பயணிக்கும் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு AC பெட்டிகள் அதிகமாகியுள்ளன. ஏழைகள் பயணிக்கவே இயலாத ‘பகட்டான ரயில்களின்’ படங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றனர்” எனக் ராகுல் காந்தி கூறியுள்ளார்.