சென்னை: ராகுல் காந்தியை தேர்தலில் நிறுத்த விடாமல் சதி செய்கின்றனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மக்கள் மன்றத்தில் ராகுல் காந்தியை முடக்க முடியாது. பின்புற வாசலில் வந்து மோடி அரசு ராகுல் காந்தியை முடக்க நினைக்கிறது. உண்மையான அரசியல் தலைவராக இருந்தால் ராகுல் காந்தியை தேர்தல் களத்தில் சந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.