Sunday, May 19, 2024
Home » புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் போலீசை சரமாரியாக தாக்கிய உகாண்டா பெண் கைதி

புழல் சிறையில் அதிர்ச்சி சம்பவம் போலீசை சரமாரியாக தாக்கிய உகாண்டா பெண் கைதி

by Karthik Yash

சென்னை: பெண் போலீசாரை, கைதி ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்தார். இச்சம்பவம் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புழல், பெண்கள் சிறையில், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் கைதிகளுக்கு உறவினர்கள் நேற்று முன்தினம் பழம், துணி உள்ளிட்ட பொருட்களை கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர், அந்த பொருட்களை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு சிறைக் காவலர் அயனிங் ஜனதா (35) வழங்கிகொண்டிருந்தார். அப்போது சிறையில் இருந்து உகாண்டா நாட்டை சேர்ந்த நசமாசரம்(35) என்ற கைதி, தனக்கு வந்த பழங்கள் மற்றும் பொருட்களை அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பெண் போலீஸ், ‘உங்களுடைய டோக்கனை கொடுங்கள், வரிசையாக நில்லுங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த கைதி நசமாசரம், பெண் போலீசை சரமாரியாக தாக்கினார். பணியில் இருந்த சக போலீசார் அவரிடம் இருந்து பெண் காவலரை மீட்டனர். இதுகுறித்து சிறை துணை அலுவலர் வசந்தி புழல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eleven − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi