சென்னை: புஷ்பா படம் பாணியில் கடத்தி வரப்பட்ட 1000 கிலோ வரையிலான சந்தனக்கட்டை கடத்தி வந்த டெம்போவை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். கர்நாடக எண் கொண்ட டெம்போவில் ரகசிய அறை அமைத்து சந்தன மரக்கட்டை கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மலப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி கடத்தி சென்ற டெம்போ ஓட்டுநர் மனோஜை பிடித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 57 மூட்டைகளில் 1051 கிலோ அளவிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.