லக்னோ: உத்தர பிரதேசத்தில் தள்ளுவண்டி வியாபாரியின் மகன் ஒருவர் சிவில் நீதிபதியாக தேர்வான நிலையில், அவர் தனது பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியதாக கூறினார். உத்தர பிரதேச மாநிலம் ருக்னுதீன் சாரை பகுதியை சேர்ந்த முகமது காசிம் (29) என்பவர், உத்தரபிரதேச பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் நீதித்துறை தேர்வில் தேர்ச்சிப் ெபற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிவில் நீதிபதி தேர்வுக்கான தேர்வில் மாநில அளவில் 135வது ரேங்க் பெற்றேன். ஆரம்பக் கல்வியை அரசுப்பள்ளியில் முடித்தேன். 10ம் வகுப்பில் தோல்வியுற்றேன். பின்னர் அந்த ேதர்வில் தேர்ச்சியடைந்து, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டே 2014ல் எல்எல்பி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதன்பின் 2019ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்எம் தேர்வில் வெற்றி பெற்ேறன்.
தற்போது நீதிபதி தேர்வில் தேர்ச்சியடைந்ததால், எனது பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றி உள்ளேன். எனது தந்தை பாலி முகமது, சாலையோர தள்ளுவண்டி ஹலீம் (வடமாநில உணவு) வியாபாரி. கடினமாக உழைத்து என்னை படிக்க வைத்தார். பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை, எனது தந்தையின் தள்ளுவண்டிக் கடையில் அவருக்கு உதவியாக இருந்து தட்டுகளைக் கழுவிக் கொடுப்பேன். எனது கல்விக்கு மிகவும் உந்துசக்தியாக இருந்தது என் தாய் அனிசா தான். சில நேரங்களில் நான் தேர்வில் தோல்வியடைந்தாலும் கூட, என்னை மேலும் மேலும் படிக்க நம்பிக்கையை ஏற்படுத்தி தந்தார். அவர்கள் என்னிடம் அதிகமாக எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புகளை பார்த்து மிகவும் பயந்தேன். நான் தேர்வில் தோல்வியடைந்தால் என் தாயின் உடலுக்கு ஏதாவது ஆகலாம் என்று கூட பயந்தேன். ஆனால், என் தாயின் ஆசிர்வாதத்தால் இன்று நீதிபதியாகியிருக்கிறேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.