பஞ்சாப்: பஞ்சாபில் சாலை நடுவே எண்ணெய் டேங்கர் லாரி திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகே எண்ணெய் டேங்கர் பற்றி எரிந்தது. எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்ததால், நெடுஞ்சாலையை புகைமூட்டம் சூழ்ந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.