புதுக்கோட்டை: புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். லஞ்சஒழிப்பு துறை தொடர்ந்த வழக்கில் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் ஆஜராகினர். மே மாதம் 216பக்க குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் ஆஜராகியுள்ளார்.