புதுக்கோட்டை: கீரனூரில் தவணை கட்டாததால் சிறுமியை கடத்திய புகாரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி வனத்துராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுமியிடம் விஏஓ விசாரணை நடத்தினார். தவணைத் தொகை ரூ.2,500 கட்டத் தவறியதால் சிறுமியை கடத்தி, மிரட்டிய நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.