புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். சிறுமி கொலை வழக்கில் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரில் முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். சிறுமி உடல் அடக்கம் செய்யப்பட்டு, கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின் இன்று மாலை போலீஸ் இடமாற்ற உத்தரவு வெளியாகும்.