*ரூ.1.43 கோடி திட்டம் வீணாகியது
குன்னூர் : குன்னூரில் ரூ.1.43 கோடி மதிப்பில் செலவில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை மையம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பால் காலி செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் உழவர் சந்தை மற்றும் வள்ளுவர் நகர் என இரு பகுதிகளில் தரம் பிரிக்கப்படுகிறது.
இதில் உழவர் சந்தை அருகே உரம் தயாரிக்கவும், வள்ளுவர் நகர் அருகே மறு சுழற்சி மையம் செய்யப்படுகிறது. இரு பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுவதாக கூறி இங்கிருந்து இடத்தை மாற்ற அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நகராட்சி சார்பில் 6 ஆண்டுக்கு முன்பு ரூ.88 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இயந்திரங்கள் உட்பட மட்கும் குப்பை,மட்காத குப்பைகளை தரம் பிரிக்க உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 55 லட்சம் செலவு செய்யப்பட்டது.மொத்தம் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் செலவு செய்த திடக்கழிவு மேலாண்மை மையம் 10 ஆண்டுகள் கூட செயல்படாமல் கோடி கணக்கான ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக காலி செய்யப்பட்டது. வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள குப்பை மையத்தையும், காலி செய்ய வேண்டும் என்று சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.