வேலூர்: வேலூர், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் 20 போலீசாரை கூண்டோடு மாற்றி எஸ்.பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிய 22 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஓராண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் மாற்றம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.