சென்னை: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் (29). இவர், அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த அடிதடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 29ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கமலேஷுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்த சிறைக்காவலர்கள், கமலேஷை உடனடியாக சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கமலேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.